search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடை திறக்க எதிர்ப்பு"

    மேட்டுப்பாளையத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு காந்திமைதானம் ஆகிய பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன. மண்டிகளில் ஆண்,பெண் தொழிலாளர்கள் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மண்டிகள் நிறைந்த ஹாஜிசாயுபு சந்தில் குடியிருப்புக்களும் உருளைக் கிழங்கு மண்டிகளும் உள்ளன.

    இதற்கிடையில் அந்த சந்தில் டாஸ்மாக் மதுக்கடை வைக்க தேவையான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது.ஹாஜிசாயுபு சந்தில் மதுக்கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருளைக் கிழங்கு மண்டி பெண்கூலி தொழிலாளர்கள் புதிதாக கட்டுமானப்பணி நடைபெற்று வரும் கடை முன்பு திரண்டனர். வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம் என்று கோ‌ஷங்களை முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் இங்கு மதுக்கடை வராது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று போலீசார் உறுதி கூறியதையடுத்து பெண் தொழிலாளர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூர் கிராமம் ஓ.எம்.ஆர். ராஜீவ் காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்திருந்த மதுபானக்கடையை அரசின் ஆணைப்படி 220 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டிய கடை 50 மீட்டர் துரத்தில் இருந்ததால் மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் 60 மீட்டர் தொலைவில் கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை திறக்க உள்ள பகுதியில் ஐ.டி. கம்பெனி உள்ளது. அதில் பெண்கள் வேலை செய்து விட்டு வெளியே வருவதற்கு பயப்படுகிறார்கள். மேலும் சுங்க சாவடியும் அங்கு இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    எனவே அங்கு மதுபானக்கடையை திறக்க அனுமதித்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் நிர்வாகிகள் முனுசாமி, கீதா, மற்றும் கிராம மக்கள் கூட்டமாக சென்று மனுவை கொடுத்தனர்.

    மேலும் நாவலூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
    ×